எனக்கு தெரிந்த ஜாதகம் பற்றிய தகவல் மட்டும் இதில் post செய்கிறேன். உங்களின் விமர்சங்கள் எதுவாக இருப்பினும் ஏற்கபடும் வணக்கம் வாருங்கள். ஜோதிட முத்துக்களை பார்க்க....

Saturday, January 25, 2020

பஞ்சாங்கம்




பஞ்ச (5) அங்கங்களைக் கொண்டது பஞ்சாங்கம்ஆகும். அவை
  1. திதி
  2. வாரம்
  3. நட்சத்திரம
  4. யோகம்
  5. கரணம்

நட்சத்திரங்களைப் பற்றி முன்பே பார்த்தோம். வாரம் அதை பற்றி அனைவருக்கும் தெரியும். மற்றவரை பார்க்கலாம்


திதி

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி ஆகும். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் ஒன்றாக சேர்ந்து இருப்பர்.பிறகு சந்திரன் தினமும் சூரியனில் இருந்து விலகி (ஒரு நாளுக்கு) 12டிகிரி வரை நகர்ந்து செல்வார். பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து (15வது நாட்கள்) 180 டிகிரி தூரத்தில் இருப்பார்.. மீண்டும் தூரம் குறைந்து ஒன்றாக சேர்வர். சூரியனிடம் விலகி 180 டிகிரிக்கு செல்வதை ஒரு திதியாகவும் , பிறகு மீண்டும் சேர்வதை ஒரு திதியாகவும் பிரித்து சொல்வர். அவை கிருஷ்ண பட்சம் , சுக்கில பட்சம் என்று சொல்லப்படுகிறது.


இந்த திதிகளை 5 வகை குறிப்பு பெயர்களால் குறிப்பர் . அவைகள்
  1. நந்தை திதி (பிரதமை, சஷ்டி , ஏகாதசி)
  2. பத்திரை (துவிதியை, சப்தமி, துவாதசி )
  3. சயை (திருதி)
  4. இருக்கை (சதுர்த்தி, நவமி, சதுரத்திசி)
  5. பூரணை (பஞ்சமி, தசமி, பௌர்ணமி )

கரணம்
கரணம் என்பது திதியில் பாதியாகம். அதாவது 6-டிகிரி கொண்டது ஒரு கரணம் ஆகும். கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன,



யோகம்

ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனின் தூரத்தையும், சந்திரனின் தூரத்தையும் கூட்டினால் வருவதே இந்த யோகம் ஆகும். யோகங்கள் மொத்தம் 27-ஆகும்.




Friday, January 24, 2020

ஜோதிட அடிப்படை வாய்பாடுகள்

கால அளவு முறைகள்
60 வினாடி 1 நாழிகை
30 நாழிகை 1 பகல் (அ ) 1 இரவு
60 வினாடி 1 நாழிகை
30 நாழிகை 1 பகல் (அ ) 1 இரவு
60நாழிகை 1 நாள்
7 நாள் 1 வாரம்
15 நாள் 1 பட்சம்
2 பட்சம் 1 மாதம்
2 மாதம் 1 ருது
2 அயனம் 1 வருடம்
60 வருடம் 1 வட்டம்
60 நாழிகை (1 நாள்) 24 மணிதுளிகள்
1 நாழிகை 60 விநாழிகை
60 விநாழிகை 24 நிமிடங்கள்
1 விநாழிகை 60 தற்பரை
1 விநாழிகை (60 தற்பரை) 24 வினாடிகள்

யுகங்கள்
  1. கிருதயுகம் (1728000 வருடங்கள்)
  2. திரேதாயுகம் (1296000 வருடங்கள்)
  3. துலாபாரயுகம் (864000 வருடங்கள்)
  4. கலியுகம் (432000 வருடங்கள்)

(இந்த நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு சதுர்யுகம். ஒரு சதுர்யுகம் என்பது 43, 20, 000 ஆண்டுகள் கொண்டதாகும். நாம் வாழும் யுகம் கலியுகம் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த யுகத்தில் சுயநலமாக மக்கள் வாழ்ந்து பாவங்கள் பல செய்து துன்படுவார்கள் என்றும் அதனால் சத்தியத்தை நிலைநாட்ட விஷ்ணு கல்கி அவதாரம் எடுத்து மக்களை கொன்று குவித்து சத்தியத்தையும் , தர்மத்தையும் நிலைநாட்டுவர் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த யுகத்தை சத்திய யுகம் என்றும் சொல்வர். கலியுகத்தில் தற்போது 5094 ஆண்டுகள் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது )

கிரகங்கள்
நட்சத்திரத்தின் மொழி தான் ஜோதிடம் அவை 9 கிரகங்கள் மூலமாக ஜோதிடத்தில் குறிப்பார்கள்
★     சூரியன் (Sun)
★      சந்திரன் (Moon)
★      செவ்வாய் (Mars)
★      புதன் (Mercury)
★      குரு (Jupiter)
★      சுக்கிரன் (Venus)
★      சனி (saturn)
★      ராகு (Ragu - dragon’s Head)
★      கேது(Kethu - dragon’s Tail)

7 கிரகங்களை Telescope உதவியுடன் பார்க்கலாம். ஆனால் ராகு மற்றும் கேதுவை பார்க்க முடியாது என்றால் அவைகள் நிழல் கிரகங்கள். சூரியனை மையமாக வைத்து நீளவட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நீளவட்டமான பாதை தான் ராசி மண்டலம் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை நம் முன்னோர் 27 பாகங்காளகப் பிரித்து அதற்கு பெயர் இட்டனர். அந்தப் பெயரால் தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப்படுகின்றன .
அவைகள் கீழ்வருமாறு காண்க :

இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகங்களின் வேகங்கள் மாறுபடும் அதாவது சந்திரனுக்கு நீள்வட்ட பாதையில் சுற்றி வர 1 மாதம் ஆகும் ஆனால் சூரியனுக்கு ஒரு வருடம், செவ்வாய்க்கு ஒன்றரை வருடங்கள், சனிக்கு 30 வருடங்கள் என்று ஒவ்வொரு கிரகங்களுக்கும் வேகம் அளவு மாறுபடும்
வருடங்கள்-60
ஆங்கில மாதம் ஏப்ரல் 14ம் தேதி ஆரம்பித்து அடுத்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி முடிய ஒரு சுற்று ஆகும். இந்த காலம் தான் தமிழில் ஒராண்டாகும். ஒவ்வொரு தமிழ் ஆண்டுகளுக்கும் பெயர் உண்டு. மொத்தம் 60 ஆண்டுகள். இந்த. 60 ஆண்டுகள் முடிந்த பின்பு திரும்ப முதலிருந்து ஆரம்பிக்கபடும்.

வருடங்களின் பெயர்கள்:

(சூரியன் வானமண்டலத்தைச் சுற்ற எடுத்துக் கொள்ளும் காலமே ஒர் ஆண்டாகும்)

Wednesday, January 15, 2020

ஜோதிடத்தின் அவசியத்தை அறிவோம்

ஜோதிடம் (Tamil Astrology) கலை 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகயும் மற்றும் பராசரர், வராகமிகிரர், ஜெய்மினி போன்ற மாமுனிவர்களால் வளர்க்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. ஜோசியம் என்ற சொல்லானது சமஸ்கிருத சொல்லான ஜீயோடிஸ் என்பதிலிருந்து பிறந்தது கோள்களின் (Planets) நகர்வை வைத்துக் கொண்டு வருங்காலத்தை கணிக்க முடியும் என்பதை சொல்வது தான் ஜோதிடம் . மிக சரியாக கணிக்க முடியுமா? ஜோதிடம் என்பது கடல் . நம்மால் சில முத்துக்களை தான் எடுக்க முடிகிறது. எனவே ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை என்று ஒரு சாரின் கருத்து ஆகும்.

நம்புவருக்கு சிவன்.. நம்பாதவருக்கு வெறும் சிலைதான்

ஜோதிட முத்துக்களை எடுக்கலாம் வாருங்கள்!!!. முத்துக்களில் குறை இருக்கும் பட்சத்தில் உங்கள் கருத்துக்களால் சரி செய்ய வரவும்!!! "எப்பொருள் யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு " எனவே தங்களின் மேலான கருத்தை Comment Type செய்து அனுப்பவும் வருக வருக என்று இந்த blog வரவேற்பதில் மகிழ்ச்சி !!! நன்றி!!