மூன்றாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள் விவரம் :
1ம் வீட்டில் இருந்தால்:
- இளைய சகோதர சகோதிரி விருத்தி, ஆதரவு ஏற்படும்
- பல வேலையாட்களை வைத்து வேலை வாங்கும்படியான அதிகாரம் யோகம் கிடைக்கும்
- சங்கீதம் நாட்டியம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் ஏற்படும்.
- பொன் , வைரம் முதலான நகைகளை பெறுவார்களாக இருப்பர்
(பொதுவாக லக்கினாதிபதி அதாவது 1க்கு உடையவன் 3ல் இருப்பதை காட்டிலும் 3க்கு உடையவன் 1ல் இருப்பது நல்லது
- சகோதர சகோதரிகளின் ஆதரவில் காலங்களை கழிக்க நேரிடும்
- மூன்றாம் வீட்டின் அதிபதி கெட்ட கிரகங்களின் பார்வைகள் இல்லாமல் இருந்தால் சகோதர சகோதரிகளின் சொத்து கிடைக்கும்.
- தைரியம் குறைந்தும் வியாதிகள் உடையவராக இருப்பர்
- சுப கிரங்களின் பார்வையோ அல்லது சேர்க்கையோ இருந்தால் செல்வங்கள் நிறைந்து மகிழ்ச்சியுடனும் இருப்பர்
- நல்ல நிலையில் இருந்தால் குறிப்பாக இளைய சகோதர சகோதரிகள் நல்ல அந்தஸ்த்தோடு இருப்பார் மேலும் அவர்களின் ஆதரவு பெற்று இருப்பர்
- ஆடை ஆபரணங்களில் ஆசையுடையவராக இருப்பர் .
- தெய்விக வழிபாடுகள், சாஸ்திர அறிவுகள் , விசுவாசம் பெற்றவராக இருப்பர்
- உடல் பலம் நன்றாக இருக்கும்
- குடும்பத்தில் ஒற்றுமை , செல்வம் நிறைந்து சுகமாக இருப்பர்
- சகோதர சகோதரிகள் நீண்ட ஆயுளுடனும் தாயார் தாய்வழி ஆதரவை பெற்றவர்களாக இருப்பர்
- நல்ல குழந்தை பாக்கியங்களை , மகிழ்ச்சியான குடும்பத்தையும் ,சகோதர சகோதரிகளின் , பெரிய மனிதர்களின் ஆதரவும், நட்பும் பெற்றவராகவும் சந்தோஷமான குடும்பத்தையும் பெற்று இருப்பர்
- சாஸ்திரம், தெய்வீக வழிபாட்டில் ஆர்வம் நிரம்பப் பெற்று இருப்பர்
- அவ்வளவு நல்ல வீடு அல்ல. சகோதர சகோதரிகள் பரம எதிரிகளாக இருப்பர்
- உடல் பலம் இல்லாமல் நோய் உடைய உடல் அமைப்பை பெற்று இருப்பர்
- சுப கிரக பார்வையோ அல்லது சேர்ககையோ பெற்று சுப பலமானால் எதிரிகளை வெல்வார் மேலும் தாய் வழி மூலம் லாபம், பயம் மற்றும் குழப்பம் பெற்று இருப்பர்
- பெண்களின் மீது ஈர்ப்புடன் , நன்றாக சாப்பிட்டு வேலை இல்லாமல் ஊர் சுற்றி திரிபவனாகவும் இருப்பர்
- தன்னுடைய சுகங்கள் பற்றி மட்டும் நினைக்கும் குணத்துடன் தைரியத்துடன் இருப்பர்.
- பெண்களின் மற்றும் வாழ்க்கை துணை வழியே சொத்துக்களை பெற்று சுகமாக சுகத்துடன் இருப்பர்
- எது ஒரு தொழிலும் இல்லாமல் தைரியத்துடன் மிக சுகமாக வாழ்வார்கள்
- இந்த வீடு மறைவு ஸ்தானம் எனவே சகோதர சகோதரிகள் உடன் சண்டையுடன் உடல் நலமின்றி சிரமத்துடன் குடும்பம் நடத்துபவராக இருப்பர்
- சிலருக்கு உடல் ஊனம் , கடன்கள் அவமானம், வருமானம் குறைந்தும் இருப்பர் . (சுப பலன் பெற்று இருந்தால் பிற்காலத்தில் அதாவது ஆயுள் காலத்தில் கஷ்டங்கள் நிவர்த்தியாகும் )
- நல்ல தைரியசாலியாகவும் வீர சுபாவமும் பொருந்தி பூர்வ புண்ணியத்தால் வசதிகள் பெற்று வாழ்வர்
- பக்தி விசுவாசம் நிறைந்தவராக இருப்பர்
- சகோதர சகோதரிகளின் மூலம் வேலை வாய்ப்பு பெற்றவராக இருப்பர். ஆனால் சுப பலன் இல்லாமல் இருந்தால் எதிர் மறையான நிலை ஏற்படும் .
- சுப பலன் பெறாவிட்டால் சகோதர சகோதரிகள் பலம் குறைந்து விளங்குவார்கள்
- தாராளமான மனதுடையவராகவும் சாதாரண வேலை வாழ்க்கை நடத்துப்பவராக இருப்பர்
- சகோதர சகோதரிகளின் அன்பை பெற்றவர்களாகவும் அவர்களால் லாபம் பெற்று இருப்பர்
- இது மறைவு ஸ்தானம் . சகோதர சகோதரிகள் சண்டை சச்சரவும் , அலைச்சலும் , மன அமைதி இன்மையுடன் சொத்துக்கள் விரயம் ஏற்படும்
- சயன சுக இல்லாமலும், செய்யும் வேலைக்காரணமாகபிற இடங்களின் வசிக்கும் நிலை பெற்றவராக இருப்பர்
No comments:
Post a Comment
Thanks