லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் இருந்தால் :
பல வியாதிகள் உடையவர். விவாதம் செய்வதில் கெட்டிக்காரர். வாழ்க்கைதுணையின் மூலம் பிரச்னைகளும், வாழ்க்கை துணையின் உடல் நல பாதிப்பும் இருக்கும். சிலருக்கு நீண்ட ஆயுள், சொத்து சுகம் அமையாது . சிலர் மன நோய் சம்மந்தப்பட்ட வியாதிகள் வரலாம்
2-ம் வீட்டில் இருந்தால் :
குடும்பத்தில் குழப்பம் இருக்கும். கண்பார்வையில் கோளாறு ஏற்படும். விஷ நாக்கு உடையவர்கள் (பேச்சில் விஷ தன்மை). குறைந்த அளவே செல்வம் அல்லது கடனில் செல்வம் மூழ்கும் நிலை இருக்கும். சாதுரியமும், சாமர்த்தியமும், கோபமும் உடையவர். ராகுவுடன் நல்ல கிரகங்கள் சேர்ந்தாலோ அல்லது பார்த்தாலோதான் நன்மை ஏற்படும்.
3-ம் வீட்டில் இருந்தால் :
தைரியசாலியாகவும், மற்றவர்களை கவரக்கூடிய ஆற்றல் உடைவராகவும் நீண்ட ஆயுளுடன், வீண் செலவு செயப்பவராகவும் இருப்பர். வாழ்க்கைத் துனைவி, குழந்தைகள், வீட்டில் செல்வம் இவை அனைத்தும் திருப்தி தரும் வகையில் அமையும். தொழில் சம்மந்தமாக வெளிநாட்டு பயணம் அமையும். வெளிநாட்டு நண்பர்கள் மூலம் லாபம் உண்டு.
4-ம் வீட்டில் இருந்தால் :
முட்டாள்தனமான காரியங்கள் செய்வார்கள். இவர்களின் செயலில் நம்பகத்தன்மை இருக்காது. சுகமில்லாதவர்கள் எனலாம். தாயாரால் அனுகூலம் இல்லை. தாயின் உடல் நலனில் அதிக பாதிப்பு ஏற்படும் . இதய சம்மந்தப்பட்ட பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு. இடம், சொத்துக்களில் பிரச்னை, வில்லங்கங்கள், பஞ்சாயத்துகள் இருக்கும். பகைகள் உண்டாகும். சிலருக்கு தரித்திர நிலை உண்டாகும். உறவினர்களிடம் சுமூகமான உறவு ஏற்படாது. ஏதாவது ஒரு வகையில் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். சிலருக்கு ஏதாவது ஒரு விதத்தில் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு மன அமைதி இல்லாமல், ஒருவிதமான சோகத்தை வைத்துக்கொண்டே வாழ்பவர்களாக இருப்பர் .
5-ம் வீட்டில் இருந்தால் :
ஆரம்பிக்கும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அது முதலில் தோல்வி ஏற்பட்டு கடும் முயற்சிக்கு பின்பே வெற்றியை அடைய முடியும்.. நெருங்கிய சொந்த பந்தத்திற்கு அதிகமாக செலவு செய்யக் கூடிய சூழ்நிலை ஏற்படும் . சிலருக்கு ஆண் வாரிசு இல்லாமல் இருக்கலாம். ஆனால் சில ஜோதிட நுல்கள் 5 ல் ராகு இருந்தால் கொள்ளி வெக்க பிள்ளை உண்டு என்று கூறுகிறது திருமண வாழ்க்கையில் அல்லது காதலில் சிக்கினாலும் பிரச்சினை ஏற்படும். சுயநலவாதிகள். மற்றும் கோபக்காரர்கள் . (ராகுவை சனி பார்த்தல் பிள்ளை பிறப்பதில் தாமதம் அல்லது எந்த வாரிசும் இல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு)
6-ம் வீட்டில் இருந்தால் :
நீண்ட ஆயுள் உடன் மாறாத வியாதி இருக்கும். அவ்வப்போது எதிரிகளின் தொல்லைகளும் இருக்கும். வாழ்க்கையில் ஆரம்பத்தில் கஷ்டத்தையும், பிற்பகுதியில் சந்தோஷத்தையும் இந்த ராகு கொடுப்பார் . நண்ப்ர்களால், வாழ்க்கை துணையால் அதிகமான ஆதாயம் உண்டு. சாப்பாட்டில் பிரியம் இருக்கும் ராகுவுடன் சந்திரனும், சனியும் சேர்ந்திருந்தால், ஆசாமி ஊழல் பேர்வழியாக இருப்பர். அதிக மூட நம்பிக்கை இருக்கும்
7-ம் வீட்டில் இருந்தால் :
திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. வாழ்க்கை துணை வியாதி உள்ளவராக இருப்பார்கள் . பூர்வக சொத்துகள் கை விட்டு போகும் வாய்ப்பு உள்ளது. ஊதாரியாகவும், அடிக்கடி வியாதிகளால் கஷ்ட படுபவராகவும், மகிழ்ச்சி இல்லாதவராகவும் இருப்பார்கள். எந்த ஒரு செயலிலும் முதலில் தோல்வி ஏற்பட்டாலும் விடா முயற்சியின் மூலம் வெற்றி பெற்றுபவராக இருப்பார்கள். அடிக்கடி பயணங்கள் செய்ய நேரிடும் .
8-ம் வீட்டில் இருந்தால் :
பல தொந்தரவுகளும். பொதுவாழ்வில் நற்பெயர் இன்மையும் இருக்கும், ராகுவுடன் சந்திரனும் இருந்தால் மன நோயால் பாதிக்கப்படுவார்கள். அடிக்கடி பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் வீண் பழிச்சொல்லிற்கும் ஆளாக நேரிடும். சதா வாக்குவாதம், விதண்டாவாதம் அல்லது சாதாரணப் பேச்சுக்கூட சண்டையில் முடியும். மேலும் அந்த சூழ்நிலையில் தோல்வி மட்டும் அமையும். பெண்கள் சிலருக்கு மாதவிடாய் பிரச்னையும், ஆண்களுக்கு மூல நோய் பிரச்னையும் இருக்கும் சிலருக்கு எதிர்பாராத அதிஷ்டம் ஏற்படும். ஆனால் அந்த அதிஷ்டத்தை மற்றவர்கள் தான் அனுபவிப்பார்கள்
9-ம் வீட்டில் இருந்தால் :
இது தகப்பனருக்கு நல்லது அல்ல. பூர்விக சொத்துக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும். சிலர் கடவுள் மேலும், அவர் சார்ந்துள்ள மதத்தின் பேரிலும் அவ்வளவு நம்பிக்கை இருக்காது. நல்ல புத்தி, புகழ்ச்சி, நல்ல தயாள குணம், கீர்த்தி, அடக்கமான குணம் ஆகியவை உண்டு. ஞாபகசக்தி உடையவர்களாகவும், தன் கையில் எடுத்துக் கொள்ளும் காரியத்தை சிறப்பாக முடிப்பவர்களாகவும் வாக்குவாதத்தில் வெற்றி பெறுபவராகவும் இருப்பார்கள். அடுத்தவரின் குறைகளை கண்டுபிடித்து குறை கூறுபவராக இருப்பார்கள்.
10-ம் வீட்டில் இருந்தால் :
காம இச்சை அதிகம் உடையவாராக இருப்பார்கள். எல்லா கலைகளையும் கற்றும் திறன் உடன் கை தேர்ந்த கலைஞர்களாக இருப்பார்கள். இலக்கியங்களிலும், கவிதைகளிலும் ஆர்வம் இருக்கும். புத்தர புத்திரகளால் சுகம் இருக்காது. குரூர குணம், அதிக ஆசை, அற்பசுகம், அஜாக்கிரதையால் தன நஷ்டம், நடன சங்கிதத்தில் ஆர்வம் ஆகியவை உண்டு. செய்யும் தொழிலில் அல்லது வேலையில் புகழ் பெறுவார்கள். இயற்கையாகவே தொழில்நுட்ப அறிவு இருக்கும். வீரம், தைரியம், பாராக்கிரமம் ஆகியவைகளைக் கொண்டவராக இருப்பார்கள்.
11-ம் வீட்டில் இருந்தால் :
11லில் ராகு இருப்பது நல்லது. சிலர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி புகழ் பெற்று வாழ்வர். சிலர் வெளி நாடுகளில் வணிகம் அல்லது வேலை செய்து பெரும் பொருள் ஈட்டுவார்கள். நல்ல கல்வி, செல்வம், புகழ், நீண்ட ஆயுள், செய்யும் தொழிலில் அல்லது வேலையில், அனைத்து நுட்பங்களையும் அறியும் அல்லது கற்கும் திறமை வளமான வாழ்க்கை, சுகம், நல்ல வலுவான உடல் ஆகியவை பெற்று இருப்பார்கள்.. நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் பெற்று இருப்பார்கள்.. முத்த சகோதரர்கள் நல்லது அல்ல. மூத்த சகோதரரை தவிர மற்ற உறவுகளுக்கிடையே சுமூகமான உறவு இருக்கும்
12-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல வளமான வாழ்க்கை அமையும். ஆனால் ஒழுக்கமற்றவனாக இருப்பார்கள். . ஆனாலும், பலருக்கு உதவும் மனப்பான்மை பெற்று இருப்பார்கள்.. சிலருக்கு கண் பார்வைக் குறைபாடுகள், ஆண் வாரிசு இல்லாமை, உடலில் உபாதைகள், வயிற்று நோய் இருக்கும். பார்க்கும் வேலை அல்லது தொழில்களில் திடீர் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலருக்கு செய்யும் காரியம் பலன் அளிக்கமால் போகவும்சூழ்நிலைகள் அமையலாம் .
குறிப்பு : ராகு செவ்வாய் பலனையும், கேது சனியின் பலனையும் பெற்று இருக்கும். ராகு 1, 2, 12 யில் இருந்தால் ராகு கேது தோஷம் என்பார்கள்.(ராகுக்கு 7யில் கேதுவும் கேதுக்கு 7யில் ராகுவும் இருக்கும்) திருமண காலத்தில் இந்த தோஷத்தை ஆராய்ந்து பின் பலன் சொல்ல வேண்டும்
ராகு திரிகோணம், கேந்திரத்தில் சுபபிரகங்கள் அல்லது சுப கிரகங்களின் பார்வை பெற்று இருந்தால் சிறப்பான யோகம் உண்டு. மேலும் ராகு தனித்த இல்லாமல் மேலும் அதன் இருபுறமும் கிரகம் இருக்குமாயின் வீரமிக்கவர் என்றும் ராஜனுக்கு ராஜன் என்றும் புலிப்பாணி ஜோதிடம் கூறுகின்றது .
எனக்கு தெரிந்த ஜாதகம் பற்றிய தகவல் மட்டும் இதில் post செய்கிறேன். உங்களின் விமர்சங்கள் எதுவாக இருப்பினும் ஏற்கபடும் வணக்கம் வாருங்கள். ஜோதிட முத்துக்களை பார்க்க....
Sunday, May 17, 2020
ராகு 12 வீடுகளில் இருந்தால் பலன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Thanks