எனக்கு தெரிந்த ஜாதகம் பற்றிய தகவல் மட்டும் இதில் post செய்கிறேன். உங்களின் விமர்சங்கள் எதுவாக இருப்பினும் ஏற்கபடும் வணக்கம் வாருங்கள். ஜோதிட முத்துக்களை பார்க்க....

Monday, May 4, 2020

5ம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்





ஐந்தாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள் விவரம் :
1ம் வீட்டில் இருந்தால்:'

    • சுப பலனாக இருந்தால் குழந்தை பாக்கியம் பெற்றவனாகவும் அந்த குழந்தைகள் நல்ல பெயர் பெற்று நலமுடன் வாழ்வர்
    • தெய்வ அனுக்கிரகம், தலைமைப் பதவி , சிலருக்கு அரசங்க பதவி, நிறைய வேலை ஆட்கள் பெற்று சிறப்புடன் வாழ்வர்.
    • தீய கிரங்கங்களின் சேர்கை, பார்வை இருந்தால் எதிர்மறையான பலன்கள் மற்றும் துர்தேவதைகளை வசியம் செய்பவராக இருப்பர்.
2ம் வீட்டில் இருந்தால்:
    • சுப பலன் பெற்று இருந்தால் அழகான மனனவி மற்றும் அன்பான குழந்தைகளால் தனம் சந்தோஷம் நிறைந்த வாழ்க்கை அமைய பெற்று இருப்பர்
    • கல்வியில் தேர்ச்சி நல்ல அறிவுடன் , அரசு மரியாதையுடன் இருப்பர்
    • 5, 2 யுடையவரின் திசா புத்தியில் லாட்டரி, ரேஸ் போன்றவற்றிலிருந்து பணம் கிடைத்து சிறப்புடன் வாழ்வர் .
    • தீய கிரங்கங்களின் சேர்கை, பார்வை இருந்தால் எதிர்மறையான பலன்கள் மற்றும் தரித்திரம் தாண்டவமாடும், தன் குடும்பத்தை வழி நடத்தவே சிரமப் படுவர் மேலும் அரசாங்கத்திற்கு தண்டமாகப் பணம் செலுத்துவர். ரேஸ் , லாட்டரியில் பணத்தை கோட்டை விட்டு மற்றவர்களின் எரிச்சலுக்கும், அவமரியாதைகளுக்கும் ஆளாவர்.
3ம் வீட்டில் இருந்தால்:
    • புத்திர சந்தன தோஷம் கொண்டவர்களாக இருப்பார்கள்
    • புராண தெய்வீக வழிபாடுகள், சாஸ்த்திரங்களில் பற்று உடையவராக இருப்பார்கள். மேலும் தெய்வதரிசனத்திற்காக வெளியூர்ப்பயணம் மேற்கொள்ளுவர்.
    • அசுப பலன் பெற்று இருந்தால் குழந்தைகளின் இழப்பு, தொழிலில் பிரச்சனை , சகோதர சகோதிரி பிரிவு ஏற்ப வாய்ப்பு உள்ளது .
    • ஆனால் சுப பலனாக இருந்தால் புத்திர பாக்கியமும் , நல்ல சகோதர சகோதிரிகளையும் பெற்றவர்
4ம் வீட்டில் இருந்தால்:
    • 5-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு 4-ம்வீடு எனவே 5-ம் வீட்டின் காரகத்துவங்கள் பாதிக்கப்படும். எனவே இது அவ்வளவு நல்லது அல்ல. புத்திரதோஷம் ஏற்படும்.
      (5ம் லக்கினமாக கொண்டால் அந்த 5ம் வீட்டுக்கு 12ம் வீடு 4ம் வீடு ஆகும் )
    • சுப பலன் இருந்தால் புத்திரர் விவசாயம் அல்லது கட்டிடத்தொழில் சம்மந்தமான தொழிலில் இருப்பர் மேலும் தாயார் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்
    • சுபகிரங்கள் சேர்க்கை ஏற்பட்டால் ராஜயோகம் கிடைக்கும். சிலருக்கு அரசுக்கு ஆலோசகராக அல்லது அது சம்பந்தப்பட்ட தொழில் செய்பவராக இருப்பர்
5ம் வீட்டில் இருந்தால்:
    • புத்திரர்கள் உயர் பதவிகளில் மற்றும் கல்வி கேள்விகளில் ஞானத்தோடு இருப்பர். அதிகமான ஆண் குழந்தைகள் இருக்கும்
    • மேலும் இந்த ஜாதகர் படித்த அறிவாளிகளின் சமூகத்திலும் சுற்றத்திலும் வாழ்க்கை நடத்துவர்
    • மேலும் செயல்களில் தொழிலில் மேன்மை அடைபவராக இருப்பார்.பல சாஸ்திரங்களில்
    • ஈடுபாடு உடையவர்.எல்லோரிடமும் நட்பாக இருப்பவர். கணக்கில் கெட்டிக்காரர்.
    • அசுபலன் பெற்று இருந்தால் எதிர்பார்த்தது எதுவும் நடக்காமல் அவதியுறுவர்.குழந்தைகள் இறக்கும் அபாயமும் உண்டு.
6ம் வீட்டில் இருந்தால்:
    • மறைவு ஸ்தானம் எனவே நல்லதுல்ல. குழந்தை பாக்கியம் குறைவு (புத்திரதோஷம்). சிலருக்கு தத்துப் பிள்ளை எடுத்து வளர்க்க நிலை ஏற்படும்
    • மேலும் சிலருக்கு பெற்ற பிள்ளைகளுடனேயே விரோதம் உண்டாகும். பிள்ளைகளால் லாபமோ நன்மையோ அடையமுடியாது
    • பெரியோரிடத்தில் விரோதம் வழக்குகள் அடிக்கடி தோன்றி மறையும்
    • தாய்மாமன் நன்றாக புகழுடன் இருப்பார்.
7ம் வீட்டில் இருந்தால்:
    • 5-ம் இடம் காதலையும், 7-ம் இடம் திருமணத்தையும் குறிப்பதால் காதல் திருமணம்செய்து கொள்வர். என்று சொல்லலாம். (மேலும் 5க்குடையவன் 7லிலும் , 7க்குடையவன் 5லிலும் இருந்தால் கட்டாயம் காதல் திருமணம் தான் என்று சொல்லமுடியும்)
    • அதிக நல்ல குழந்தைகளை உடையவராக இருப்பர் அவர்களால் பொன்னும், பொருளும் , செல்வமும் பெறக்கூடியவராக இருப்பர்
    • தாராள மனத்துடன் சுற்றத்தார்கள், நண்பர்கள் மூலம் நற்பெயர் பெறுவார்கள் ஆனால் வாழ்க்கை துணையின் குடும்பத்தரால் மன அமைதி இல்லாமல் இருப்பார்கள்
    • அசுப பலன் பெற்று இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும்
8ம் வீட்டில் இருந்தால்:
    • புத்திர சந்தான தோஷம் ஏற்பட்டு மேலும் சிரமமாக குடும்பத்தை நடத்துவார்
    • அதிர்ஷ்டக்குறைவானவர் என்று சொல்லாம்.
    • மூதாதையர் சொத்துக்கள் கிடைப்பதில் சிரமமும் அப்படியே கிடைத்தாலும் அந்த சொத்தை கடனுக்காக இழக்க நேரிடும்.
    • நல்ல வருமானம் இருக்காது. சிலருக்கு புத்திரர்கள் இருந்தாலும் கஷ்டம் வறுமையில் வாடுவார்கள்
9ம் வீட்டில் இருந்தால்:
    • இவருடைய புத்திரர்களில் ஒருவர் நற்பெயருடன் நன்றாக இருப்பார்
    • கல்வியில் திறமையுடன் இருப்பர். பிதுர் பாக்கிய சொத்துக்கள் கிடைக்கும்.
    • பெரியவர்களிடம் பக்தி விசுவாசத்துடன் இருப்பர்.
    • சாஸ்த்திரங்களில் தேர்ச்சியும், பாண்டித்தியமும் பெற்று தெய்வீக வழிபடுகளில் பற்றுதலுடனும், தீவீர நம்பிக்கையுடனும் இருப்பர்
    • அசுப பலன் பெற்றால் அதிஷ்டமில்லாதவர்கள் எனலாம்
10ம் வீட்டில் இருந்தால்:
    • புத்திர சந்தான விருத்தி உண்டு.
    • அரசு பதவி ,ராஜயோகம்,ஏராளமான சொத்துக்கள் சேரும். அரசு மரியாதை கிடைக்கும்.
    • குடும்ப உறவுகளில் அவருக்குத்தான் முதல் மரியாதை கிடைக்கும்.
    • சகல சௌபாக்கித்ததுடன் வாழ்வார்கள்
11-ம் வீடு இருந்தால்:
    • லாபஸ்தானம் எனவே இவரின் புத்திரர் நற்பெயரெடுத்து நல்ல நிலைக்கு வருவர். மேலும் புத்திரர்களால் உதவி கிடைக்கும்
    • குடும்பம் அமைதியும் சந்தோஷத்தையும் அடைந்து பெரிய மனிதர்களின், அரசின் அன்பும் ஆதரவும் பெற்று வாழ்வர்
    • சிலர் அதிக சூழந்தைகளுடன் வாழ்வர்
12ம் வீட்டில் இருந்தால்:
    • ஆண்ணாக இருந்தால் மனைவிக்கு அடிக்கடி கர்ப்ப சிதைவு ஏற்படும். புத்திர தோஷம் ஏற்படும்
    • குடும்பம் அமைதி, சந்தோஷமும் இல்லாமல் இருக்கும்.
    • எதிலும் பற்றில்லாத வாழ்க்கை வாழ்வர். மன அமைதியின்றி காலத்தை நடத்த வேண்டிவரும்
    • தெய்வீக வாழ்க்கை வேண்டி ஊர் ஊராகச் சுற்றுவர்.



No comments:

Post a Comment

Thanks