லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் இருந்தால் :
அதாவது லக்கினத்தில் இருந்தால் புத்திசாலியாக இருப்பர். நல்ல பேச்ச திறன் உடன் பேச்சில் இனிமையும் இருக்கும். கலகலப்பானவர். வாழ்க்கை துணையிடம் பிரியத்துடன் இருப்பர் உலக அறிவு உடையவர்.
2-ம் வீட்டில் இருந்தால் :
பேச்சு நன்றாக இருக்கும் பொய் பேசுவதில் வல்லவராக இருப்பர். இவரின் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். ஏஜென்சி தொழில் மூலமாகவோ, வியாபாரம் மூலமாகவோ பணம் சம்பாதிப்பர். சிலர் தான் கற்ற கல்வியைக் கொண்டு பணம் சம்பாதிப்பர். புதன் ஒரு இரட்டைக் கிரக ஆகியதால் சிலருக்கு இரட்டை வருமானம் உண்டு.
3-ம் வீட்டில் இருந்தால் :
இளைய சகோதர சகோதரிகள் நிறைய பேர் இருப்பர். சிலருக்கு இரட்டை பிறப்பாக இருக்கும் அமைப்பு உண்டு . சிலர் உள் ஒன்று வைத்து வெளியில் ஒரு மாதிரி (இரட்டை வேஷம் ) பேசுவார்கள்.
4-ம் வீட்டில் இருந்தால் :
கல்வியில் நல்ல தேர்ச்சி இருக்கும். பாட்டு மற்றும் கலைகளில் ஆர்வம் இருக்கும். நல்ல நண்பர்கள் அமைவர். தாய்வழி உறவுகளால் உதவி கிடைக்கும். வாகனம், வீடு வாங்க யோகம் உண்டு. ஒரு வீடோ அல்லது ஒரு வாகனமோ வாங்க முயற்சி செய்தால் இரண்டாக வாங்கும் அமைப்பு சிலருக்கு ஏற்படும்.
5-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல குணமுடையவர். ஆத்மஞானி, வித்துவான், சிலர் கவிதைகள் எழுதும் ஆற்றல் பெற்று இருப்பர் நல்ல வேடிக்கையாக பேசுவார். அரசாங்கம் மற்றும் பெரியவர்கள் மூலம் நல்ல பதவி, மரியாதை கிடைக்கும். தந்திர வேலைகள் செய்ய தெரிந்தவர்கள்
6-ம் வீட்டில் இருந்தால் :
எதற்கெடுத்தாலும் தர்க்கம் (விவாத சீலன்) செய்பவர். வியாதிகள் உடையவர்கள் புதன் தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் பாதிக்கப் பட்டிருந்தால் மன நோய்கள், நரம்புத் தளர்ச்சி நோய்கள் போன்ற உண்டாகும். எதிரிகளை வெல்லும் தன்மை உண்டு சிலரின் மாமன் வழியில் ஒருவர் மிகபிரபலமாக இருப்பர். மேலும் மாமனின் உதவி கிடைக்கும்.
7-ம் வீட்டில் இருந்தால் :
வாழ்க்கைத் துணை கெட்டிக்காரத்தனம் மிகுந்தவராக இருப்பர். அவர் மூலம் வருமானம் வரும். பாவக் கிரங்களுடன் சேர்ந்தால் 2-வது திருமணம் அமையும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் நல்ல நட்பு கிடைக்கும். கலைகளில் ஆர்வம் இருக்கும். நல்ல ஆயுள் உண்டு. மிருதுவானவர். தன் தந்தையைக் காட்டிலும் சிறந்து விளங்குவர்
8-ம் வீட்டில் இருந்தால் :
மந்திர தந்திரங்களில் சிறந்து விளங்குவர்; கணித சாஸ்த்திரம், சட்ட நுணுக்கம், வியாபாரம் முதலியவற்றில் சிறந்து விளங்குவர். கல்வியில் தடை ஏற்படும். நல்ல மனத்துடையவர், தைரியம் குறைந்தவர் . பூர்ண ஆயுள் உண்டு
9-ம் வீட்டில் இருந்தால் :
சிறந்த அறிவாளி. எதையும் அலசி, ஆராய்ந்து பார்க்கும் குணம் உடையவர். மிக வேடிக்கையாகவும், கெட்டிக்காரத்தனமாகவும் பேசி பிறரை கவர்ந்து இழுக்கும் திறமை உண்டு . சுகம் உண்டாகும் . புத்திர சுகம் உண்டு. கல்வியில் சிறந்து விளங்கிவர்
10-ம் வீட்டில் இருந்தால் :
நேர்மை , மகிழ்ச்சி உடையவராகவும் இருப்பர். அளவான வார்த்தைகளை பேசுபவர். எல்லா கலைகளிலும் வித்தகனாக( வித்தையறிந்தவர்) இருப்பர். காவிய கணித அறிந்தவர். புகழ், எடுத்த காரியத்தில் வெற்றி உடையவர். .கணிதத்திலும், வானவியலிலும் தேர்ச்சியுற்றவனாக இருப்பார்கள். மேலும் சிலர் அரசாங்க வேலையில் இருப்பார்கள். ஏஜென்சி தொழில் லாபம் உண்டு
11-ம் வீட்டில் இருந்தால் :
அதிகம் படித்தவர்.கூர்மையான புத்தி உடையவர். செல்வந்தராகவும், மகிழ்ச்சி உள்ளவராகவும் இருப்பர். விசுவாசமான வேலைககாரர்கள் கிடைப்பார்கள். கடன் இல்லாதவர்கள். நல்ல மூத்த சகோரர் உடையவர்கள் மேலும் அவர்கள் மூலம் வருமானம் உண்டு. செல்வந்தர் எல்லா விஷத்தையும் அறியும் ஆற்றல் உண்டு .பெரியவர்களின் அனுக்கிரகம் உண்டு. நல்ல புத்திரர் மற்றும் நண்பர்கள் அமைவர். பொறியியல் சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் இருந்தால் நல்ல சாதனை படைப்பர்.
12-ம் வீட்டில் இருந்தால் :
சலன புத்தியும், நிலையற்ற தன்னமையும் உடையவர். கல்வி சிறப்பாக இருக்காது. முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருப்பர் பெண்களின் மேல் தீராத மோகமுடையவனாக இருப்பர் மேலும் தோல் வியாதி உள்ள பெண்கள் மற்றும் தரம், வயது வித்தியாசமின்றி பல பெண்களிடம் தொடர்பு அல்லது ஈடுபாடு கொண்டு இருப்பர் சிலர் பொருள் விரையமாகி வறுமையில் சிக்க நேரிடும். நல்ல துப்பறியும் திறன் இருக்கும். எதிரிகளை வெற்றி கொள்வர்
குறிப்பு : பொதுவாக மறைந்த புதன் (லக்கினத்திற்கு 3, 6, 8, 12 ல் இருந்தால் மறைவு) நிறைந்த அறிவு என்று சில ஜோதிடநூல்கள் கூறுகிறது. ஆனால் நீசம் , அஸ்தமனம் (சூரியனுக்கு மிக அருகில் அதாவது 10 பாகைக்குள்) அடைந்தால் நல்லது.
Friday, May 8, 2020
புதன் 12 வீடுகளில் இருந்தால் பலன்:
Thursday, May 7, 2020
செவ்வாய் (அங்காரகன்) 12 வீடுகளில் இருந்தால் பலன்
லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் இருந்தால் :
செவ்வாய் லக்கினத்தில் இருப்பது நல்லதுல்ல. எதிரிகளால் உடலில் ரத்த காயம் , மற்றும் பல காயங்கள் ஏற்படும். பொற்றோரிடம் பாசமின்மை, சக்திமிகுந்த வியாதி , மூட சிந்தனை, கண்டம், சிறிய விஷயத்தை பெரிதுபடுத்துதல் , சலனபுத்தி ஆகிய ஏற்படும்.
2-ம் வீட்டில் இருந்தால் :
சண்டைக்காரர்களாக இருப்பர். ஆனால் பேச்சுத் திறமை இருக்கும். குறைந்த செல்வம், கல்வி இருக்கும். மேலும். ஒரு சிலர் தீயவர்களுக்கு சேவை செய்வர். தாராளமனசு, கபடமற்ற வெளிப்படையான மனம், ஊதாரி தனமான செலவு, பூர்விக சொத்தில் சட்ட சிக்கல் ஆகிய இருக்கும். பிடிவாதம், முன்கோபம், நியாய தர்மத்தை எடுத்துச்சொல்லும் குணமும், வீண்பேச்சுகள், விவாதங்கள் ஆகியவை இருக்கும்
3-ம் வீட்டில் இருந்தால் :
செவ்வாய் சகோதர காரகன் எனவே சகோதர ஸ்தானமான 3ல் இருப்பது நல்லதுல்ல சகோதர வகையில் பிரச்சனை கொடுக்கும். மேலும் 10ம் வீட்டுடன் சம்மந்தப்பட்டு இருந்தால் சகோதர சகோதிரி மூலம் தொழில் அமையும் . செல்வம், புகழ் பெற்று எல்லா வசதிகளோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வர். பிடிவாதக்காரர் ஆனால் சாதனையாளர்.
4-ம் வீட்டில் இருந்தால் :
வீடு கட்டும் யோகமுண்டு. தாயார் மூலமாக அனுகூலமில்லை மேலும் தாயாருடன் சண்டை போடக் கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை , இதய நோய்கள், வண்டி வாகன விபத்துக்கள் , கல்வியில் மந்த தன்மை ,அரசியலில் முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்
5-ம் வீட்டில் இருந்தால் :
புத்திர பிரச்னை அல்லது கரு கலைதல் போன்றவை நடக்கும் சில நூல்களில் பெண்குழந்தைகள் மட்டுமே இருக்கும் என்று கூறுகிறது. வாழ்க்கை வசதியின்மை , சொத்து, சுகம் குறைப்பாடு இருக்கும். சிலருக்கு மனம் வெறுப்பு அடையும் சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். சிலர் தர்ம, நியாயங்கள், நன்நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டு குறுகியமனப்பான்மை கொண்டவர்களாக இருப்பர்.
6-ம் வீட்டில் இருந்தால் :
ரத்த சம்மந்தப்பட்ட வியாதிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு ஆனாலும் உடல் கட்டுமானம் சிறப்பாக இருக்கும் மேலும் சிலருக்கு எதிகளால் தொல்லை உண்டு ஆனாலும் எதிரிகளை துவம்சம் செய்யக்கூடியவனாக இருப்பர். காம சிந்தனை அதிகமாக இருக்கும் .
7-ம் வீட்டில் இருந்தால் :
சிலருக்கு மண வாழ்க்கையில் அதாவது வாழ்ககை துணையால் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். திருமணவாழ்க்கை சண்டை நிறைந்ததாக இருக்கும். சண்டை போடும் மனப்பான்மை அதிகமாக இருக்கும். சிலர் நியாய தர்ம இல்லாத காரியங்கள் செய்யும் கல் மனமுடையவராக இருப்பர் . நோய் வாய்ப்பட வாய்ப்புகள் அதிகம்
8-ம் வீட்டில் இருந்தால் :
விபத்துக்களால் மரணம் ஏற்படுக்கூடும்; பண நாசம் சிலருக்கு ஏற்படும்; குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு குடும்ப நிம்மதி பாதிக்கப் படும். இரத்த சம்மந்தமான நோய்கள், பாலின உறுப்புகளில் பிரச்னை வர வாய்ப்பு அதிகம். உடலும், உள்ளமும் நலமாக இருக்காது. சுப பார்வை இல்லை என்றால் சொத்துக்கள் சேராது மேலும் ஆயுள் குறைவு
9-ம் வீட்டில் இருந்தால் :
தகப்பனாருக்கு உபாதைகளைக் கொடுக்கும் மேலும் தந்தையிடம் நல்ல உறவு இருக்காது. குருவோ அல்லது புதனோ தொடர்பு இருந்தால் சிறந்த பிடிப்பு,, மத விஷயங்களில் நம்பிக்கை உண்டாகும். கடுமை தன்னை அதிகமாக இருக்கும்.
10-ம் வீட்டில் இருந்தால் :
இது மிகவும் சிறந்த இடமாகும் ஆளும் திறமை இருக்கும்.பெரிய பதவிகள் கிடைக்கும். பாராட்டுக்கு மயங்குவர். வேகமானவர். நிறைய செல்வங்கள் , புகழ் என ராஜ அந்தஸ்துடன் இருப்பர்
11-ம் வீட்டில் இருந்தால் :
அதிரடியாக, தெளிவாகப் பேசக்கூடியவர். புத்திசாலியாக இருப்பர். சபலம் உடையவர். தனித்தன்மை வாய்ந்தவராகவும் அதிகாரவர்க்கத்தினருடன் தொடர்புடையவராக இருப்பர். பல இடங்களை வாங்கி சேர்ப்பர். சொத்து சுகம், புகழ், ஆகியவை சிறப்பாக இருக்கும் . பல சிறந்த நண்பர்கள், கூட்டாளிகள் இருப்பர்
12-ம் வீட்டில் இருந்தால் :
வெற்றிகள் அடைய முடியாத சூழ்நிலை அமையும் ஏழ்மை தாண்டவமாடும். கண்ணில் குறைப்பாடு ஏற்படும். நேர்மை அற்றவராகவும் சுயநலமிக்கவராகவும் இருப்பர் காரியமற்ற திறமை இருக்காது. பிரபலம் ஆக முடியாது சிலர் தன வாழ்கை துணையையும் செல்வம், பணம் ஆகியவற்றையும் இழக்க நேரிடும்.
குறிப்பு : 2, 4, 7, 8, 12 இருந்தால் செவ்வாய் தோஷம் எனபர்கள். இதை திருமணத்தின போது பார்க்க படுகிறது. (சில ஜோதிடநூல்கள் செவ்வாய்தோஷத்தை ஏற்றுக் கொள்வது கிடையாது ) மேலும் 2, 12 யில் செவ்வாய் இருந்தால் பரிகார செவ்வாய் தோஷம் என்றும், மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம் ஆகிய வீடுகளில் இருந்தால் அது எந்த இடமாக இருந்தாலும் செவ்வாய் தோஷம் கிடையாது என்று மேலும் சில ஜோதிட நூல்கள் கூறுகிறது.
ஆனால் செவ்வாய் 3, 6, 7, 8, 9, 10, 12 இடங்களில் இருப்பது நல்லதில்லை என்றும் அவை செவ்வாய் தோஷம் என்றும் புலிப்பாணி ஜோதிடம் கூறுகிறது
சந்திரன் 12 வீடுகளில் இருந்தால் பலன்
லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் இருந்தால் :
லக்கினத்தில் சந்திரன் இருப்பது நல்லது. சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருந்தால் மிகவும் நல்லது. வாழ்க்கையில் உயர்வு பெறுவர் . சிற்றின்ப சுகம் நன்றாக அமையும். பந்தயத்தில் வெற்றி பெறுவார். திடீர் பணவரவு உண்டு
2-ம் வீட்டில் இருந்தால் :
சந்திரன் பெண்கிரகமாகியதால் பெண்கள் மூலமாகப் பணவரவு இருக்கும். ஆனால் பணவரவு ஒரே மாதிரி இருக்காது ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். சந்திரன் நன்றாக இருந்தால் அரசாங்கத்தில் நல்ல மதிப்பு, சொத்து சுகம், நல்ல கல்வி, புகழ் ஆகியவை உண்டாகும். பொதுவாக வளர்பிறையில் நல்லது செய்வார்.
3-ம் வீட்டில் இருந்தால் :
எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் தன்மை உடையவர். சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் உடல் வலிமையையும் ஆற்றலையும், சகோதர சகோதரிகளை ஆதரவையும் , மகிழ்ச்சியான வாழ்க்கை தருவார். 3வது வீடு குறுகிய பயணத்தை குறிப்பதால் அடிக்கடி குறுகிய பயண செய்ய வைப்பார். ஆனால் சந்திரன் கெட்டால் எதிர்மறையாக சூழ் அமையும் .
4-ம் வீட்டில் இருந்தால் :
சுற்றத்தாரால் மற்றும் நண்பர்களால் மகிழ்ச்சியுண்டு, பகையும் உண்டு. மகிழ்ச்சியான வாழ்வு அமையும் சிற்றின்பங்களில் பிரியம் அதிகமாக இருக்கும் . சந்திரன் ஓர் நீர்க் கிரகமாதலால் வீட்டிலே நீர் வசதியுண்டு அல்லது ஆறு குளம் கடலோரத்தில் வீடு அமையும். தாய்வழிச்சொத்து கிடைக்கும் ஆனால் தாய்க்கு நல்லதுல்ல. பிறருக்கு கொடுக்கும் குணம் உண்டு
5-ம் வீட்டில் இருந்தால் :
பணம் பல வழிகளில் வரும். சிறப்பான குழந்தை பாக்கியம் உண்டு. அதிக பெண் குழந்தை பாக்கியம் அமையும். நல்ல அறிவு ஆற்றல், அதிர்ஷ்ட வாய்ப்பு அமைந்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைய அடையவைப்பார்.
6-ம் வீட்டில் இருந்தால் :
குழந்தைப் பருவத்தில் அல்லது இளம் வயதில் அடிக்கடி நோயுற்ற மகிழ்ச்சி குறைந்து காணப்படும் அதே இடத்தில் சந்திரன், செவ்வாய் அல்லது சனியின் சேர்க்கை அல்லது பார்வைபெற்றிருந்தால் தீராத நோய்கள் இருக்கும். விரோதிகள், எதிரிகள் இருப்பர். பிறருக்கு அடங்கி நடக்கக்கூடிய தன்மையை தருவார்.
7-ம் வீட்டில் இருந்தால் :
காமம் மிகுந்து இருப்பார். வாழ்க்கைத் துணைவர் அல்லது துணைவி அழகாக இருப்பார். துணைவர் அல்லது துணைவி பண வரவு உண்டு. மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்
8-ம் வீட்டில் இருந்தால் :
நீரில் கண்டம், கப நோய், ஆகியவை ஏற்படும். சந்திரன் மனதுக்குக் காரகன் எனவே மனபிராந்தி, மனது சம்மந்தமான நோய்கள் ஏற்படக்கூடும். தாயாரால் நன்மைகள் மிகவும் குறைவாக இருக்கும். பூர்விக சொத்துக்கள் எளிதாக கைக்கு வந்து சேரும். சந்திரனுடன் செவ்வாயும், சனியும் சேர்வார்களேயாகில் கண்பார்வை பாதிக்கப்படும்.
9-ம் வீட்டில் இருந்தால் :
நல்ல மனம் படைத்த தாயார் அமைவர். ஆனால் இங்கு செவ்வாயும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் தாயாருக்கு காயம்படும் மேலும் தாயாரை கடும் வார்த்தைகளால் பேசுவர். புத்திரபாக்கியத்துடன் செல்வத்துடன் நல்ல பாக்கியசாலியாக இருப்பர். புத்திரபாக்கியம் இருக்கும். சங்கீதம், நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு இருக்கும் .
10-ம் வீட்டில் இருந்தால் :
இறைவழிபாட்டில், ஆன்மிகத்தில் மிகவும் நாட்டம் உடையவராக இருப்பர். தன் மதத்தின் மீது பற்று ஏற்பட்டு மதம் பிரசாரம் செய்வர். புத்திசாலியாகவும் துணிச்சல் மிக்கவராக இருப்பர். செய்தொழில் வெற்றி, பகைவரிடம் வெற்றி காண்பர் உதவி செய்யும் மனப்பான்மையும், தர்ம சிந்தனையுடன் இருப்பர். சந்திரனுடன், சூரியனும், குருவும் சேர்ந்திருந்தால் வேதாந்தங்களிலும், ஜோதிடத்தில் சிறந்து விளங்குவர் நீண்ட ஆயுள் உண்டு பல அறக்கட்டளைகளைத் தலைமை தாங்கி நடத்தும் வாய்ப்புக்கள் அமையும் .
11-ம் வீட்டில் இருந்தால் :
மூத்த சகோதர்களின் மூலம் லாபத்தை பெறுவர். செய்யும் தொழில் மேன்மை அடைவர். தொழில் வணிகமாக இருந்தால் நல்ல லாபம் சம்பாதிப்பர் எந்த வேலையை எடுத்தாலும் எளிதில் முடிக்க கூடிய திறமை உடையவர். நல்ல தீர்க்காயுள் உண்டு. வேலையாட்கள் மூலம் வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் மீது ஆர்வம் ஏற்படும். அரசாங்கத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும்
12-ம் வீட்டில் இருந்தால் :
இந்த இடம் நல்லதுல்ல . பாதங்களில் வலி, கண் பார்வை குறைபாடு இருக்கும் சிலர் கொடுர சிந்தையுடன் மகிழ்ச்சியில்லமல், அதிகாரமில்லமல் தடைகளை அதிகமாகப் பெறு மதிப்பு இழந்த வாழ்க்கை வாழ நேரிடும். குறுகிய மனப்பான்மை, கடின மனம், குறும்புத்தனம், நக்கல் மிகுந்தவராக இருப்பர்.
குறிப்பு : பொதுவாக சந்திரன் 6,8 தவிர்த்து எந்த வீட்டிலும் தீய கிரகங்களின் பார்வை இல்லாமல் இருந்தால் நல்லது என்று புலிப்பாணி ஜோதிடம் கூறுகிறது.
Tuesday, May 5, 2020
குரியன் 12 வீடுகளில் அமர்ந்தால் பலன்
லக்கினத்தில் இருந்து
1-ம் வீட்டில் இருந்தால் :
(அதாவது லக்கினத்தில்) கோபக்காரர். சிலர் சோம்பல் உடையவர். துணிச்சல் உடையவராக இருப்பர் தங்களைப் பற்றிய உயர்வு மனப்பான்மை உடையவர் இரக்க சிந்தனை, பொறுமை குறைவாக இருக்கும். காரிய வெற்றி உண்டு. மத்திம வயதில் கண் சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படு வாய்ப்பு உண்டு. நல்ல உடல் அமைப்பு இருக்கும்
2 -ம் வீட்டில் இருந்தால் :
2-ம் வீட்டில் சூரியன் இருப்பது அவ்வளவு நல்லது அல்ல: கஷ்டத்தின்பேரில்தான் பணம் சம்பாதிக்க முடியும். நல்ல கிரகங்கள் பார்வை இருந்தால்தான் பண வரவு சரளமாக இருக்கும்.
கல்வியில் தடை, முரட்டு குணம், பொருள் சேதம் , வாழ்க்கை துணையோடு எப்போதும் ஒரு மனவருத்தம் என்று இருக்கும்.(மேஷம், சிம்மம் போன்ற ராசிகளாக இருந்தால் நன்மையான பலன்கள் ஏற்படும்)
3-ம் வீட்டில் இருந்தால் :
உடல் உறுதியுடன், வசீகரமான தோற்றத்துடன் இருப்பர் தியாக மனப்பான்மை,அதீத துணிச்சல், எதிரிகளை வெற்றிக் கொள்ளும் திறமை உடையவராக இருப்பர் உறவுகள் ,இளைய சகோதர உறவுகள் சிறப்பாக இருக்காது. சிறந்த பொருட் சேர்க்கையும் உண்டாகும்
4 -ம் வீட்டில் இருந்தால் :
பிதுராஜித சொத்துக்கள் கிடைக்க வழியுண்டு. வேதாந்தத்திலும், மற்றும் புதிய விஷயங்களிலும் ஆர்வம் உண்டு. சிலருக்கு இதய பாதிப்பு, மன அமைதி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் சிலருக்கு தீய நண்பர்களின் சகவாசத்தால் தனது முன்னோர்களின் சொத்துக்களை இழக்க நேரிடும்.
5-ம் வீட்டில் இருந்தால் :
மிகுந்த அறிவாற்றல் மற்றும் புத்திசாலித்தனம் மிக்க நபராக இருப்பார். எந்த ஒரு தீமையான விஷயங்களையும் எதிர்த்து போராடி வெற்றி பெறக்கூடியவராவார். இயற்கை மிகுந்த இடங்களுக்கு உதாரணத்திற்கு காடுகளில் பயணம் செல்லக்கூடிய அமைப்பும் விருப்பமும் இருக்கும்.பொருளாதார நிலை சாதாரணமாகவே இருக்கும். மகன்களுடன் உறவு சுமுகமாக இருக்காது
6-ம் வீட்டில் இருந்தால் :
எதிரிகளால் சில தொல்லைகள் உண்டு ஆனால் அதை எதிர்த்து போராடி வெற்றி பெறக் கூடிய திறமையும் இருக்கும். ஆரோக்கியமான உடலையும், சிறந்த செரிமான சக்தியையும் இருக்கும். சிலருக்கு அரசாங்கத்தால் கவுரவிக்கப்படக்கூடிய அமைப்பும் இருக்கும். சிலர் சிறந்த அரசியல்வாதியாக இருப்பார் . எதையும் சாதிக்கும் வல்லமை பெற்றிருப்பார் . ஆனால் அடிக்கடி உடல்நலக் குறைவுகள் ஏற்படும். சூரியனுடன் தீய கிரகங்கள் சேர்ந்து கூட்டாக இருந்தால் நீண்ட, தீர்க்க முடியாத வியாதிகள் உண்டாகும்.
சூரியனுடன் நல்ல கிரகங்கள் சேர்ந்திருந்தால் அல்லது பார்த்தால், ஜாதகன் நிர்வாகத் திறமை உள்ளவனாகவும் செல்வந்தனாக இருப்பார் சூரியன் சனியின் பார்வை பெற்றால், இதய நோய்கள் உடையவராகவே அல்லது மத்திமத்தில் இதய நோய்கள் உண்டாகுவதற்கு வாய்ப்பு உண்டு
7-ம் வீட்டில் இருந்தால் :
திருமண வாழ்க்கை சுகப்படாது. பெண்களுக்கு இருந்தால் இந்த மனக்கசப்பு விவாக ரத்து வரைக்கும் போய்விடும். பெண்கள் மீது அதிக மோகங்கொண்டவராகவும், அதன் காரணமாக பல பிரச்சனைகளை அவர் சந்திக்கக்கூடிய நிலை ஏற்படும்.சாதாரணமான மற்றும் முன்னேற்றம் இல்லாத வாழ்க்கை அமைய பெறுவார் .சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று பொருளீட்டும் வாய்ப்புகள் வரும். உடல் நல குறைவு ஏற்படும்.
8-ம் வீட்டில் இருந்தால் :
8-ம் வீடு மறைவு ஸ்தானமாதலால் நல்லதுல்ல . ஆயுள் குறைவு, அரசாங்கத்திடமிருந்து உதவியின்மை, தகப்பனாருக்குத் தோஷம், கண் நோய், மனக் குழப்பம், செலவு ஆகியவை ஏற்படும். பல சூழ்நிலைகளில் தோல்வியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கையில் விரத்தி ஏற்படும். கண் பார்வை சம்மந்தப்பட்ட குறைபாடுகள் ஏற்படும்.
9-ம் வீட்டில் இருந்தால் :
சூரியனும் , 9ம் வீடும் தகப்பனாரைக் குறிக்கிறது. பொதுவாக ஒரு கிரகம் எதற்குக் காரகம் வகிக்கிறதோ அந்தக் காரகத்தைக் குறிக்கும் வீட்டில் அந்த கிரகம் இருப்பது நல்லது அல்ல. இது பிதுர்தோஷம் ஆகும். எனவே தகப்பனாருக்கு நல்லது அல்ல. சூரியன், புதன் சேர்ந்து இருந்தால் படிப்பில் வல்லவர்களாக இருப்பர்.புத்திர பாக்கியம் , செல்வம், உறவினர்கள் பெற்று இருப்பர். சிலருக்கு பெரியவர்களிடம் மரியாதை மற்றும் ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு இருக்கும் . மேலும் சிலர் தர்மம் இல்லாமல் தவறான அறிவியலாளராக இருப்பர்.
10-ம் வீட்டில் இருந்தால் :
சூரியன் தனியாக நல்ல நிலையில் இருந்தால் பலவிதமான நன்மைகள் ஏற்படும். மேலும் அவர் தொட்டதெல்லாம் துலங்கும். எடுத்துச் செய்யும் வேலைகள் அனைத்தும் வெற்றி பெரும். செழிப்பான, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும். அது பத்தாம் இடத்தின் அதிபதி மற்றும் சூரியனுடைய தச அல்லது புத்திகளில் அபரிதமாகக் கிடைக்கும். உயர்கல்வி , தந்தை வழி செல்வம் ஆகியவை அமைய பெறுவர். உடல் மற்றும் மனோ பலமிக்கவராக , விரமிக்கவராகவும் இருப்பர் . சிலருக்கு வெளிநாடுகளுக்கும் செல்லக்கூடிய யோகம் உண்டு.
11-ம் வீட்டில் இருந்தால் :
அதிக முயற்சிகள் இன்றி வெற்றிகள் கிட்டும். செல்வத்துடன் நல்ல கல்வி அறிவுடன் நீண்ட ஆயுளுடன் வாழ்வர். மனைவி, குழந்தைகள், வேலையாட்கள் என்று வசதியான வாழ்க்கை அமைய பெறுவார் கொள்கைக் குன்றாக இருப்பான். இவர்களுக்கு கீழ் வேலை செய்கிறவர்களின் திறனால் இவருக்கு பேரும், புகழும் கிட்டும். ஒரே நேரத்தில் பல விதமான தொழில்களில் ஈடுபட்டு அதில் மிகுந்த செல்வத்தை ஈட்டுவார். சமூகத்தால் மதிக்கப்படக்கூடிய நிலைக்கு உயர்வர் . சிலருக்கு அரச மரியாதைகள், விருதுகள் கிடைக்கும்
12-ம் வீட்டில் இருந்தால் :
இது நல்லதுல்ல . இளமையில் அல்லது முதுமையில் ஏழ்மை நிலையை அமையும். மற்றவர்களால் ஒதுக்கப்பட்டு திருட்டு எண்ணம், மற்றும் பாவங்களைச் செய்யக்கூடியவராக மேலும் ஒழுக்கமற்ற, கெட்ட, பாவகரமான வாழ்க்கை வாழ நேரிடும். தோல்விகளை அதிகமாகச் சந்திப்பர். இழிவான செயல்கள் அல்லது வேலைகளில் ஈடுபவர். உடல் உறுப்பில் ஊனம் இருக்க வாய்ப்பு உள்ளது. சுறுசுறுப்பானவராக இருப்பர் . ஆனால் சுப கிரகம் பார்வை அல்லது சேர்க்கை பெற்றால் நல்ல பலனை தரும் . இது பொது பலன் மட்டும் தான் . குழப்பம் வேண்டாம்
குறிப்பு : பொதுவாக சூரியன் 3,6,10,11 ல் இருந்தால் நல்லது என்றும் 2,3,4,7,5 ஆகிய இடங்களில் இருந்தால் உடலில் நோய் பாதிப்பு, பகை வரும் என்று புலிப்பாணி ஜோதிடம் கூறுகிறது.
Monday, May 4, 2020
12ம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்
பன்னிரண்டாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள்
1ம் வீட்டில் இருந்தால்:
- ஜாதகன் மெலிந்த தேகத்துடன் அழகான தோற்றதுடனும் மனதில் துணிவின்றி இருப்பர் .
- சிலருக்கு நல்ல உணவு, சிரமங்கள் இல்லாத வேலை, நல்ல நித்திரை, நல்ல செலவு செய்து வசதி வாய்ப்புகள் பெற்று வாழ்வர்
- தன ஸ்தானத்தில் 12ம் அதிபதி இருந்தால் பலமுறை பல இடங்களில் பண விரையம் கடன் தொல்லைகள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லாமல் அவதிப்பட்டு வாழ்வர்
- தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக் கொள்வர்
- தேவையில்லாத பேச்சுகளை பேசுவர் மேலும் பேச்சிற்க்கு மதிப்பு இருக்காது
- சிலருக்கு கண் பார்வை கோளாறு ஏற்படும்
- இளைய சகோதர சகோதரிகளாலும் , நண்பர்களாலும் செலவு ஏற்பட்டு சொத்துகளை இழப்பர்.
- சிலர் இளைய சகோதர சகோதரியை இழக்க நேரிடலாம்.
- சிலர் கோழையாகவும், அதிகம் பயப்படுபவனாகவும் இருப்பர்
- எப்பொழுதும் அழுக்கான தோற்றத்துடன் திரிபவனாக இருப்பார்
- சிலர் சிறுவயதிலே தாயை இழக்க நேரிடும்
- சொந்தங்களால் , நண்பர்களாலும் செலவு போன்று குடும்ப செலவினங்கள் அதிகமாக இருக்கும். பொதுவாக குடும்ப செலவு அதிகமாகும்.
- மனப் போராட்டங்கள் நிறைந்து தேவையில்லாத கவலைகளுடனும் உறவினர்களில் விரோதத்துடனும் குடியிருக்கும் இடங்களில் வீட்டு சொந்தக்காரர்களால் தொல்லையுடனும் வாழ்க்கை அமையும்
- ஆனால் போஜன (சாப்பாடு) சுகம், சயன (தூக்கம்) சுகம் அதிகமாகும்
- குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கும் அல்லது குழந்தைகளால் பிரச்சினை இருக்கும்.
- மிகுந்த இறைபக்தி உடையவராகவும் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பர் .
- சிலருக்கு மூத்த சகோதரர்கள் , தேவாலய தரிசனங்கள் , திருப்பணிகள், பெரிய மனிதர்கள்,பிள்ளைகள் மூலம் விரயம் ஏற்படும்.
- எப்போதும் மிகுந்த மகிழ்ச்சியுடனும், செழிப்புள்ளடனும், எல்லா வசதிகளும் நிறைந்து இருப்பர்
- ஆரோக்கியமாகவும், அழகான தோற்றமுடையவனனகவும் இருப்பர்
- எதிரிகளின் தொல்லை இருக்காது மேலும் எதிரிகளை எதிர்கொள்ளும் ஆற்றல் இருக்கும்
- சிலசமயம் சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாக அமையும்.
- தகாத செயல்களை செய்ய நேரிடும் .
- வாழ்க்கை துணை மற்றும் பெண்கள் வழியில் அதிக செலவினங்கள், ஜாதகர் ஆண்ணாக வறுமையில் வளர்ந்த மனைவி மகிழ்ச்சி அற்ற திருமண வாழ்க்கை அமையும்
- சிலர் உடல் உபாதைகளாலும், காம சம்மதப்பட்ட உணர்வுப் போராட்டங்களாளும் செலவினங்கள் ஏற்படும்.
- எதையும் கற்கும் ஆர்வம் இருக்காது . மேலும் சிலருக்கு சொத்து சுகங்களும் இல்லாமல் போகும்
- செல்வந்தனாகவும் மக்களால் அறியப் பட்டவனாகவும் பல வேலையாட்கள் வேலை செய்ய சௌகரியமான வாழ்க்கை வாழ்வர்
- சித்தாந்தங்கள் வேதாந்தங்களில் ஆர்வமுடையவராகவும் தர்ம சிந்தனைகள் உடையவராகவும் இருப்பர்
- வழக்குகளால் செலவு, உடல் சௌரியங்களால் செலவுகள் ஏற்படலாம்
- சிறுவயதிலே தந்தையை பறிகொடுக்கவோ அல்லது விற்கவோ நேரிடும் அல்லது தந்தையால் செலவுகள் ஏற்படும்.
- சகோதர சகோதரியால் நஷ்டங்கள் செலவுகள் ஏற்படும்.
- வெளிநாட்டில் வாழ்ந்து, அங்கே சொத்துக்கள் வாங்குகின்ற அமைப்புடையவாராகவும் நேர்மையுடையவராகவும் இருப்பர்
- கடின உழைப்பாளி, வேலையின் பொருட்டு கடினமான பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.
- சிறைக் காவலர் வேலை, மருத்துவத் துறையில் வேலை மாயானங்களில் வேலை செய்ய நேரிடும்.
- செய்யும் தொழில் முடக்கம், மிக குறைந்த வருமானம், செய்யும் தொழிலை விட்டு ஆகியவை ஏற்படலாம்
- மூத்த சகோதரர்கள் , தேவாலய தரிசன வழிபாடுகள், தான தருமங்கள் ஆகியவற்றால் நஷ்டமும் செலவும், தொல்லைகளும் ஏற்படும்.
- வேலைக்குச் செல்ல மனமில்லாமல், வணிகத்தில் ஈடுபட்டு குறைந்த வருமான ஈட்டுவர்
- குறைந்த நண்பர்களும் அதிக எதிரிகளும் பெற்று இருப்பர்
- தர்ம செலவுகள் செய்வாராக இருப்பர் உடல் நலமின்மையால் செலவுகள் ஏற்படும்.
- கண் பார்வை நன்றாக இருக்கும். நல்ல நித்திரை சுகம் ஏற்படும்.
- சிலர் ஓய்வு ஒழிச்சல் இல்லாதவனாகவும், எப்போதும் எங்கேயாவது சுற்றித் திரிந்து கொண்டே இருப்பார்கள்
11ம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்
பதினொன்றாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள்
1ம் வீட்டில் இருந்தால்:
- அதிகம் படித்தவராகவும், சாதுர்யமாகப் பேசும் திறனுடையவராகவும் செல்வத்துடனும், செல்வாக்கு இருப்பர்.
- எந்த தொழிலில் ஈடுபட்டாலும் நல்ல லாபங்களை பெறுவர்
- குடும்பம்செல்வத்துடன்செல்வாக்குடன்விளங்கும்
- முத்த சகோதர சகோதிரிகள் நல்ல சுக சௌகரிங்களுடன் இருப்பார்கள்
- அதிகம் படித்தவர்களாவும் சாதுர்யமாகப் பேசுபவராகவும் இருப்பார்கள். எந்தத் தொழில் செய்தாலும் அதீத லாபம் கிடைக்கும்
- நல்ல குடும்ப வாழ்க்கை, நல்ல வருமானம், செல்வாக்கு, அதிகாரம் , கெளரவம், நல்ல தேஜஸ் ஆகியவற்றுடன் பலரும் விரும்பும்படியாக வாழ்வார்
- வருமானம், கெளரவம், அதிகாரம் ஆகியவற்றுடன் பலரும் விரும்பும்படியாக வாழ்வார்கள்
- மூத்த சகோதர சகோதரிகளில் நல்ல நிலையில் இருப்பார்கள் .மேலும் அவர்களின் ஆதரவு பெற்று வாழ்வர்.
- குடும்பம் பூரணபலத்துடன் விளங்கும். நேர் வழியில் சென்று சந்தோஷமாக குடும்ப வாழ்க்கை அனுபவிப்பர்
- வீடு, வண்டி வாகனங்களுடனும், பணிஆட்களுடனும் செல்வாக்குடனும் விளங்குவார்கள் . .
- தெய்வீக வழிபாடுகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள்
- புத்திரர்களால் நல்ல செல்வாக்குடனும், புகழுடனும், நல்ல வருமானத்துடன் குடும்பம் விளங்கும்
- தந்தையின் தொழிலையே பிள்ளைகளும் செய்து பிரபல செல்வந்தராக விளங்குவார்கள். மேலும் அரசாங்க ஆதரவு கிடைக்கும்
- எதன் மூலம் லாபம் கிடைத்தாலும் கடன்காரர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் கொடுக்கும் நிலை ஏற்படும். செய்யும் தொழில் லாபத்தை விட கடனே அதிகமாகும்
- செய்கின்ற தொழிலில் எதிரிகள் இருப்பர் மேலும் அவர்களால் பல இடைஞ்சல்களை சந்திக்க நேரிடும்
- வாழ்க்கை துணை மூலம் செல்வங்கள், லாபங்கள் வந்து சேரும்.
- திருமணம் பிறகு நல்ல யோகமான வாழ்க்கை அமையும்
- பதவிகள் ,நல்ல யோகங்கள் , வண்டி வாகனமங்கள் சிறப்பாக அமையும்.
- புத்திரர்களால் குடும்பம் பிரகாசத்துடன் விளங்கும்
- பல தொழில்கள் செய்ய முயன்று பல வழியில் பணம் செலவு செய்ய செல்வத்தை இழந்து கஷ்டத்துடனும் சஞ்சலத்துடனும் வாழ்வர்
- மூத்தோர் மரணம் உண்டாகலாம்
- தந்தையின் தொழிலை மிக சிறப்பாக செய்து பலவிதமான பொருள்கள் மற்றும் லாபங்களை அடைவர்
- அரசாங்கத்தில் நல்ல பெயர், வண்டி வாகனங்கள் சிறப்பான வாழ்க்கை அமைய பெறுவர்
- கெளரவமான நல்ல வேலையுடன் , கைநிறைய சம்பாத்தியம்,தெய்வீக அருள் ஆகியவை நிறைந்து அமைதியான குடும்ப வாழ்க்கை அமைய பெறுவர்
- தெய்வீக வழிபாடுகள் நிறைந்து இருக்கும்
- மூத்த சகோதர்கள் நல்ல அந்தஸ்தோடு இருப்பர் ஆனால் இவருக்கு பெரிய லாபங்கள் கிடைக்காது. மிதமான பலனே ஏற்படும்.
- வயதான காலத்தில் தனவந்தராக இருப்பர்
- செய்யும் தொழிலில் லாபங்கள் குறைந்து காணப்படும் மேலும் பொருள் விரையம், கடன் தொல்லைகள் ,வியாதிகளுடன் இருப்பர்
- போஜன வசதிகளும், நித்திரை சுகங்களும் இருந்தாலும் மன அமைதி இல்லாமல் இருப்பர்
10ம் வீட்டு அதிபதி 12 வீடுகளில் இருந்தால் பலன்
பத்தாவது வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள்
10ம் வீடு தொழில் ஸ்தானம் எனவே நாம் என்ன தொழில் செய்வோம் அல்லது செய்யலாம் என்பதையும் கணிக்க இந்த வீடு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிலைக் கணிக்க மேலும் சில வழிமுறைகள் உண்டு.
1 ம் வீட்டில் இருந்தால்:
- சொத்துக்கள், செல்வம், அதிகாரம், செல்வாக்கு, சுக சௌரியங்கள், கல்வி தெய்விகவழிபாடுகள், தான தருமங்கள், அரசாங்கத்தில் உயர் பதவி முதலியவைகளுடன் இருப்பார்கள்
- சுயமுயற்சியால் கடின உழைப்பாளியால் தீவிரமாக தொழில் செய்து முன்னேற்றம் காண்பர்.
- இது அரசியலுக்கு ஏற்ற அமைப்பு. அரசியலில் நுழைந்தால், சக்தி வாய்ந்த பலரின் தொடர்பு கிடைக்க பெறுவர்.
- நற்பெயருடன் சொந்தங்கள், நண்பர்கள், அறிவாளிகளின் நட்பையும் பெற்று இருப்பார்கள்
- தொழில்கள்: சுய வேலைவாய்ப்பு, அரசியல் அல்லது பொதுமக்கள் சம்மந்தப்பட்ட தொழில், Health Club போன்ற உடல் சம்மந்தபட்ட வேலைகள்
- நல்ல அழகுடனும் வாக்குவன்மை, திறம்பட பேசும் சக்தி, தைரியம் , செல்வ செழிப்புடனும் மிகவும் அதிஷ்டத்துடனும் இருப்பர் .
- குடும்பத் தொழிலை பெரிய அளவில் செய்யுது குறுக்கிடும் தடைகளைத் தாண்டி வெற்றிப் படிக்கட்டில் ஏறி ஒரு உச்ச நிலையை அடைவர்
- தொழில்கள்: வங்கி, முதலீடுகள், கணக்காளர்கள், உணவகங்கள், கற்பித்தல், ஆலோசகர்கள், உளவியலாளர்கள்
- சகோதர தோஷம் ஏற்படும். சகோதரர்கள் இருந்தாலும் செல்வாக்குடன் இருக்கமாட்டார்கள்.
- சிலர் பகுதி நேர வாழ்க்கை பயணங்களிலே கழியும்.அப்படிப்பட்ட வேலை அமையும்.
- ஆனால் இயற்கையிலேயே எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் அல்லது தீர்க்கும் திறமை இருக்கும்
- தொழில்கள்: Communication (தொடர்பு), கலை, விற்பனை, விளம்பரம், கணினி, எழுதுதல், வெளியீடு(Publishing)
- பெரிய மதிப்புள்ள அழகான வீடு, கட்டடிங்கள் , வண்டி வாகனங்கள், பணி ஆட்கள், செல்வ செழிப்பான வாழ்க்கை, தாய் மற்றும் தாய் வழி ஆதரவு முதலியன உண்டாகும்
- பலராலும் மதிக்கப்பட்டு தலைமை ஏற்கும் சிறப்புடையவர்களாகவும் உதாரண மனிதராகவும் இருப்பர்
- தொழில்கள்: விவசாயம், கட்டிட வர்த்தகம், ரியல் எஸ்டேட், வாகனங்கள், நீர், புவியியல் மற்றும் சுரங்கம் போன்ற வேலைகள்
- மகிழ்ச்சி, செல்வாக்குவுடன் கூடிய வாழ்க்கை, பெரியமனிதர்களின் நட்பையும் அரசாங்கத்தில் உயர் பதவிக பெற்று இருப்பார்கள்.
- புத்திரபாக்கியம், சந்தோசம் செல்வாக்கு கூடிய குடும்பம், பெரிய மனிதர்களின் நட்பு அமையும்
- மறைமுக எதிரிகளும் இருப்பர். மேலும் அவர்கள் முன்னேற்றத்திற்கு தடைகள் ஏற்படுத்துவர் .
- தொழில்கள்: அரசியல், பங்கு தரகர்கள், மத சடங்குகள் செய்பவர்கள், பொழுதுபோக்கு சம்மந்தபட்டதொழில்
- தந்திர புத்தியுடன் பிறர் பொருளை அபகரிக்கும் குணம் இருக்கும்.
- உடம்பு மெலிந்தாக காணப்படுவர்கள். நல்ல உடல் அமைப்பு , அந்தஸ்து இல்லாதவராக இருப்பார்கள்
- சுபலன் எனில் பொறுப்பான பதவிகள் வந்து சேர்வதுடன் நடுநிலையாளர் என்று பெயர் பெற்று பலரின் மதிப்பையும் பெறுவர்
- அடிக்கடி இடம் மாற்றம், ஊர் மாற்றங்கள் ஏற்படும்.
- தொழில்கள்: வக்கீல்கள், ராணுவம், போலீஸ், சாதாரண பணியாளர்கள் (like Labour, Waiter), சுகாதாரம் மற்றும் உணவு தொடர்பான தொழில்கள்
- 10க்குடையவன் 7ம் வீட்டில் இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள். ஆனால் ஆண் ஆக இருந்தால் மனைவி மூலம் பொருள் சேரும்
- சிலருக்கு தொழிலில் சிறந்த பங்குதாரர் அல்லது கூட்டாளி கிடைப்பர்.அதுவே அவருடைய வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக அமையும்.
- தொழில் நிமித்தமாக அடிக்கடி தூர தேசங்களுக்குச் சென்றுவரும் வாய்ப்புஅமையும்
- தொழில்கள்: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகம் (Trading, mechant, Foreign business)
- நல்ல ஆயுள் உண்டு. புத்திர தோஷம் ஏற்படும்.
- தொழிலில் அல்லது வேலையில் பல இடைஞ்சல்களும், இடமாற்றங்களும் உண்டாகும்.
- திறமைசாலிகளாக இருந்தாலும் பலரால் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பர்
- தொழில்கள்: காப்பீடு,ஆராய்ச்சி, இறப்பு தொடர்பான, ஜோதிடம் போன்ற தொழில்கள்
- தகப்பனார் சொத்துக்கள் விரயம் ஆகும். சுப பலன் எனில் தந்தையின் உதவியும் வழிகாட்டுதலும் நிறைந்திருக்கும்.
- அரசாங்க ஆதரவு, பெரிய மனிதர்களின் நட்பை பெறுவார்கள் ய்வர்.
- தானதருமங்களிலும் ஆன்மீக வாழ்விலும் ஈடுபாடு மற்றும் தர்மசிந்தனை உடையவர்களாக இருப்பர்
- பிற்கால வாழ்க்கை சிறப்புடன் இருக்கும்
- தொழில் : சட்டம் சம்மந்தபட்ட தொழில், பல்கலைக்கழக ஆசிரியர் கற்பித்தல், பயணம், மதத் தொழில்கள் (மத போதகர்), வெளிநாட்டு வேலை
- உலக விஷ்யங்களை அறிந்தவராக இருப்பார்கள்
- பெரிய மனிதர்களின் ஆதரவு ,உறவினர்களின் ஆதரவு, உலக விசயங்களில் நல்ல அறிவு இருக்கும்.
- தொழில்: அரசியல் மற்றும் அரசாங்க வேலைகள், பொதுமக்கள் மற்றும் வெகுஜனங்களுடன் கையாள்வது போன்றதொழில்கள், மேலாளர்கள் (Manager)
- செய்யும் காரியங்களில் ஒவ்வொன்றிலும் லாபத்தை பெறுவர்
- முத்த சகோதர சகோதரிகளுக்கு சிரமமும் மாரகமும் ஏற்படலாம்
- பணத்துடன், மதிப்பும், மரியாதையுடன் மகிழ்வுடன் இருப்பர்
- நல்ல நோக்குடையவர்களாகவும் பொதுத்தொடர்புகள் உடையவராக இருப்பார்
- தொழில்கள்: வணிகம் மற்றும் வர்த்தகம், விளையாட்டு சம்மந்தபட்ட வேலை (Sports), கணக்காளர்கள் (Accountants)
- பொருள் நஷ்டம் , புத்திரர்களால் கஷ்டங்கள், அனாவசியமான செலவுகள் , சொத்துக்கள் விரயம் போன்றவை இருக்கும்
- சிலர் வெளி நாட்டிற்குச் சென்று அங்கு பல சிரமங்களைச் சந்திக்க நேரிடும்
- தொழில்கள்: வெளிநாட்டில் ரகசியம் செய்யும் வேலைகள் (foreign jobs requiring secrecy), பயணங்கள், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள், தொண்டு நிறுவனங்கள்